குறும்செய்திகள்

கேரளாவில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

22040 new cases of corona infection confirmed in Kerala

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் கேரளாவில் இன்னும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு குறையாமல் உள்ளது. இதுதவிர, ஜிகா வைரசின் பாதிப்பும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.93 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு 117 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 17,328 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 20,046 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,97,834 ஆக அதிகரித்துள்ளது. 1,77,924 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

22040 new cases of corona infection confirmed in Kerala

Related posts

ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி..!

Tharshi

BBC தமிழ் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்கு அழைப்பு..!

Tharshi

யாழ். தனியார் விடுதியில் வாள் வெட்டு..!

Tharshi

Leave a Comment