அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தீவிர கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு, அத்தகைய நபர்களுக்கு பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளில் 3-வது டோஸ் போட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர அனுமதி அளித்துள்ளது. அதன்மூலம் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
மற்றவர்களுக்கு 2 டோஸ்களிலேயே போதிய பாதுகாப்பு கிடைப்பதால், இன்னொரு டோஸ் தேவையில்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையர் (பொறுப்பு) ஜேட் உட்காக் தெரிவித்துள்ளார்.