இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர குறிப்பிடுகையில்..,
டெல்டா திரிபு கொழும்பில் வேகமாக பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலும், டெல்டா திரிபு பரவ ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் நூற்றுக்கு 100 வீதம் டெல்டா வைரஸ் உள்ளமை உறுதியாகியுள்ளது.
அத்துடன், சூப்பர் டெல்டா பரவும் அபாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு டொக்டர் சந்திம ஜீவந்தர அச்சம் வெளியிட்டுள்ளார்.