நாட்டில் மேலும் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று இதுவரை 1,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 507,330 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுவரை நாட்டில் 12,284 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.