நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று இதுவரை 1,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 510,040 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 421,742 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் இன்று 72 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் இதுவரை கோவிட் தொற்றினால் 12,448 பேர் பலியாகியுள்ளனர்.