குறும்செய்திகள்

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Sudden death of a woman who was cured of a corona infection in Jaffna

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து இருந்த குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வடமராட்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவர், சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமாகி இருந்தார் எனவும், அந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண் வெளிநாட்டில் உள்ள ஒருவரை திருமணம் முடித்திருந்ததாகவும், மிக விரைவில் வெளிநாட்டில் உள்ள தனது கணவனிடம் செல்ல இருந்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Sudden death of a woman who was cured of a corona infection in Jaffna

Related posts

நான் எப்போதுமே சிங்கிள் கிடையாது : போட்டுடைத்த லட்சுமி மேனன்..!

Tharshi

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

My work only allows Internet Explorer, so I have to manually

Tharshi

Leave a Comment