குறும்செய்திகள்

யாழ். பாசையூர் பகுதியில் மஞ்சள் கடத்திய இருவர் கைது..!

Two arrested for smuggling turmeric in Jaffna Pasaiyur area

யாழ். பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்தி வரப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.

மஞ்சளை கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள அதிகாரிகளில் அந்த மஞ்சள் பொதிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

Two arrested for smuggling turmeric in Jaffna Pasaiyur area

Related posts

BlackRock’s Rieder Halved Fund’s Emerging Market Exposure

Tharshi

எதிரிகள் சுற்றி வளைப்பு : போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை..!

Tharshi

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக திடீரென ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்டால் பரபரப்பு..!

Tharshi

Leave a Comment