யாழ். போதனா வைத்தியசாலையிலும் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய, 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்நிலையில், 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள முடியும்.
வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.