நாட்டில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று இதுவரை 679 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 528,415 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,238 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் இன்று 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் இதுவரை கோவிட் தொற்றினால் 13,408 பேர் பலியாகியுள்ளனர்.