பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்றையதினம் பாராளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தேசிய சபையின் தலைவராக செயற்படவுள்ளதுடன் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம அமைப்பாளர், ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசிய சபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அந்தவகையில், டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி, ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோ, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன், சாகர காரியவசம் ஆகியோர் இந்த தேசிய சபையில் செயற்படுவர் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
The National Assembly nominations were made public by the Speaker