அச்சுவேலியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் பலி..!
யாழ். அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.