குறும்செய்திகள்

2 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன்..!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசப் படங்களை காட்டி வந்துள்ளதுடன் அந்த குழந்தை மீது பாலியல் சேட்டை விட்டுவந்த நிலையில் அவர்களது உறவினரான பெண் ஒருவர் கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையும் தன் மீது மாமா இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவரை நேற்று கைது செய்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்டவரை நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

The future steps of Scala – What to expect from upcoming releases

Tharshi

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான் பயங்கரவாதிகள் கொலை..!

Tharshi

மாதவிடாய் பிரச்சினைகளும்.. நாப்கின்களும்..!

Tharshi

1 comment

Leave a Comment