குறும்செய்திகள்

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் பலி..!

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளுடன் பயணித்த கார் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 06 அகதிகள் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்..,

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு பொலிசாரை கண்டனர்.

எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின் மறுபுறமாக சென்றனர்.

அப்போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

21-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : தெண்டுல்கரின் கணிப்பு..!

Tharshi

16-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

5 comments

Leave a Comment