குறும்செய்திகள்

நாட்டில் இன்று இதுவரை மட்டும் 2008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 2008 people

நாட்டில் மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,008​ பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 239,669 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 201,389 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,581 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 2008 people

Related posts

மீண்டும் தமிழ் நடிகருடன் இணைய மறுக்கும் ப்ரேமம் நடிகை..!

Tharshi

நாளை முதல் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

கொழும்பு துறைமுகம் அருகே தீ பரவிய கப்பலில் வெடிப்பு : கடலில் வீழ்ந்த 8 கொள்கலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment