காளானுடன் முட்டை சேர்த்து செய்யும் இந்த குழம்பை தோசை, இட்லி, நாண், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இன்று இந்த சூப்பரான முட்டை காளான் குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்க்கலாமா..?
தேவையான பொருட்கள் :
காளான் – கால் கிலோ
முட்டை – 6
பெ.வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 4
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவைக்கு
துருவிய தேங்காய் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை :
* காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டைகளை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிறு தீயில் வாணலியை வைத்து மிளகாய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறி விடவும்.
* பின்னர் அதனுடன் காளான்களை போட்டு வதக்கவும்.
* அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் தூவி கிளறி விடவும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி வதக்கவும்.
* அதனுடன் தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டையை உதிரியாக்கி போட்டு கிளறி விடவும்.
* மசாலா வாசம் நீங்கி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.