ஸ்பரட்லி தீவுக்கு அருகில் மூழ்கும் நிலையிலிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர்கள் சிங்கப்பூர் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டதாக கூறப்பட்டபோதும், ஜப்பானிய கடற்படையினரே அவர்களை மீட்டுள்ளனர்.
தற்போது வியட்னேமுக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள், சர்வதேச குடிப்பெயர்வுகள் ஒழுங்கமைப்பிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
The state of 306 Sri Lankans pulled from the sinking ship