ISIS உடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பில் கைதானார்.
30 வயதான அவர் காத்தான்குடியில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
2022இல் தமிழகம் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய பொலிஸாரால் கைதான 2 பேருடன் அவர் தொடர்பிலிருந்துள்ளார்.