எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தற்போது காணப்படுகின்ற தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்க பெரும்பாலும் சந்தர்ப்பம் காணப்படுவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிய சுகாதார வழிகாட்டியொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல வரும் அக்டோபர் 15 ஆம் திகதி வரை மாகணங்களுக்கு இடையே பயணத்தடை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Night curfew from October 1st