கொழும்பு மாதிவெல பிரகத்திபுர பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அப் பகுதியில் இதுவரை இருவருக்கு கொரோனா தொற்றின் திரிபடைந்த பிரிவாகிய டெல்டா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் மேலும் பலருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.