அரசாங்கத்திலுள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு எதிரான கடிதமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அக்கிராசனத்தில் இருந்தபோது ரோஹினி கவிரத்ன, சமநிலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒருதலைப்படசமாகவே செயற்பட்டார் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.