குறும்செய்திகள்

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது..!

Narahenpita hospital grenade recovery one Another suspect arrested

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Narahenpita hospital grenade recovery one Another suspect arrested

Related posts

பெண்களை தீவிரமாக தாக்கும் நரம்பியல் நோய்கள்..!

Tharshi

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கரீனா கபூர்..!

Tharshi

2024 இன் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் டிரம்ப் விடுக்கும் அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment