தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட அராஜக செயற்பாடுகளுக்கு எதிராக, தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.