இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தாம் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்துடன், 3 வருட ஒப்பந்தத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், தனது பதவி விலகல் தொடர்பில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 comments