ஆதம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாஸ்டரை மனைவியுடன் பொலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் கிறிஸ்தவ சபை நடத்தி வருபவர் இலங்கையை சேர்ந்த பாஸ்டர் சேரால்டு மனோகர் (வயது 58). இவர் சபைக்கு வரும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி மடிப்பாக்கம் மகளிர் பொலிசாரிடம் சிறுமியின் பாட்டி புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை தந்த பாஸ்டர் சேரால்டு மனோகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி ஹெலன் (48) என்பவரையும் கைது செய்தனர்.
A girl was sexually assaulted by a Sri Lankan preacher
1 comment