குறும்செய்திகள்

செல்வராகவனின் சர்ச்சை பதிவு : குழப்பத்தில் ரசிகர்கள்…!

கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகங்களை கொண்ட செல்வராகவன், சமீபகாலமாக வலைத்தளத்தில் சர்ச்சை பதிவுகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை செல்வராகவன் திருமணம் செய்து விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே, “ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள். அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தைவிட, மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்” என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் செல்வராகவன் சில தினங்கங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

செல்வராகவனுக்கு என்ன பிரச்சினை. எதற்காக இதுபோன்ற பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related posts

24-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை..!

Tharshi

விக்ரம் எடுத்துள்ள திடீர் முடிவு..!

Tharshi

3 comments

Leave a Comment