தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை 2021 ஜூன் 11 ஆம் திகதி பொலன்னறுவையில் திறக்கப்படவுள்ளது.
சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
இந்த சிறுநீரக மருத்துவமனையில், 200 டயாலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஆபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் (sub specialties) உள்ளன.
மேலும், சீனா அரசாங்கத்தின் 11 பில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலைக்கு, சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
South Asias largest kidney hospital in Polonnaruwa