குறும்செய்திகள்

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி..!

Actor Dilip Kumar Admitted to Mumbai Hospital

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து,  மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தற்போது 98 வயது. முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திலிப் குமாருக்கு நேற்று சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலிப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மீலும், கடந்த ஆண்டு திலிப் குமாரின் இரு சகோதரர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததனர்.

Actor Dilip Kumar Admitted to Mumbai Hospital

Related posts

விமானம் மூலம் மும்பைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பான்ட்..!

Tharshi

இலங்கை கடன் நிலையான தன்மையை அடைவது முக்கியம் : சீன மக்கள் வங்கி (PBoC) ஆளுநர் யி கேங்..!

Tharshi

800 கிலோ மாட்டு சாணம் காணவில்லை : சத்தீஷ்காரில் பரபரப்பு புகார்..!

Tharshi

Leave a Comment