குறும்செய்திகள்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம்..!

Schools to be reopened

ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில், நாடு முழுவதும் உள்ள 200 க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர், அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமென முன்னதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Schools to be reopened

Related posts

IBM Wins $83 Million From Groupon In Internet Patent Fight

Tharshi

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னில் ஆல் அவுட்..!

Tharshi

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi

Leave a Comment