இலங்கையுடன் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஏழு விமான சேவை நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
இதற்கமைய, இந்த 7 விமான நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி சேவைகளை மேற்கொள்ளவுள்ளன.
அந்தவகையில், ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை முதல் நேரடி விமான சேவைகளை நடத்தவுள்ளன.
இத்தாலியின், NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் ஆகியனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமானங்களை இயக்கவுள்ளன.
அத்துடன், இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவகைளை ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்டுள்ளன.