போலியான தகவல்களை வழங்கி களுக்காக செல்வதை தடுக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு சென்றதன் பின்னர் பலர் பல்வேறு காரணங்களுக்காக, தங்களது தனிப்பட்ட விபரங்களை மாற்றிக்கொள்வதாக முறைப்பாடுகள் வந்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணிமனைக்கும் ஆட்பதிவு திணைக்களத்திற்கும் இடையில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.
இதன்படி, சந்தேகத்திற்கிடமானவர்களின் விபரங்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு ஆட்பதிவு திணைக்களம் துரிதமாக உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.