யாழ் கல்வியங்காடுப் பகுதியில் நேற்று முன்தினம் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
ரஜீவன் பிரியவதனா எனும் 26 வயதான குடும்பப் பெண்ணே பலியாகியதாக தெரிய வருகின்றது.
யாழ் இந்துமகளீர் கல்லுாரி பழைய மாணவியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அவர் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானதாக கணவர் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த முரண்பாடே இவரது தற்கொலைக்கு காரணம் என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.