குறும்செய்திகள்

வானிலையில் திடீர் மாற்றம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

கடுமையான இடி-மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் பலத்த மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

விஜய்க்கு சவால் விடுத்துள்ள மகேஷ் பாபு..!

Tharshi

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை : வரலாற்று சாதனை..!

Tharshi

இலங்கையில் இன்று இதுவரை 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment