20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் அணிகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் அணிகள் எவை என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், சச்சின் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது..,
“இந்திய அணி உலக சாம்பியனாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அரைஇறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னேறும் என்பதே எனது கணிப்பு.
அதே சமயம் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா எதிர்பாராத வகையில் வியப்பூட்டும் அணிகள் ஆகும். அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை தென்ஆப்பிரிக்காவில் இருப்பது போன்று இருக்கும்.
அதை தென்ஆப்பிரிக்க வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்” என தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
Sachin Tendulkar picks his Semi Finalists of T20 World Cup
1 comment