இரவு உணவு சமைப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையிலான நகைச்சுவையான உரையாடலை அவதானியுங்கள்.
மனைவி : இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன் : பருப்பும் சாதமும்.
மனைவி : நேத்து தானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன் : அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்
மனைவி : உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன் : முட்டைப் பொரியல்?
மனைவி : இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன் : பூரி?
மனைவி : நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
மனைவி : வீட்ல மோர் இல்ல.
கணவன் : இட்லி சாம்பார்?
மனைவி : நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன் : நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி : சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன் : வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி : நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன் : ஆணியே புடுங்க வேணாம் போடி….!