பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரான ஏலியந்த வைட், மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
ஆகஸ்ட் நடுப்பகுதியில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட எலியந்த வைட் பல வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.