எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணி முதல், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று இரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 comments