மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே நேற்று (22) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு கடற்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக மீனவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Body of a man was found on Kalladi beach