குறும்செய்திகள்

வீட்டிற்கு சென்ற கனேடிய பொலிசார் : சடலத்துடன் வெளியே வந்த காரணம்..!

கனடாவில் உள்ள வீட்டில் நபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹாலிபக்ஸில் உள்ள வீட்டில் நேற்றிரவு ஆண் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த ஹெரிங் கோவ் சாலை மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டது. இதை சந்தேகத்துக்குரிய மரணமாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளார்.

நபர் உயிரிழந்தது குறித்து யாருக்கேனும் தகவல் கிடைத்தால் பொலிசாரை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் நூற்றுக்கு 100 வீதம் டெல்டா வைரஸ்..!

Tharshi

இணையத்தில் லீக்கான கூகுள் பிக்சல் 7a விவரங்கள்..!

Tharshi

சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்..!

Tharshi

Leave a Comment