செப்டம்பர் 7 ஆம் திகதிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, கனடா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்..,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி முதல் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 7 ஆம் திகதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
அந்தவகையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்கவுள்ளது.