குறும்செய்திகள்

பிறந்த குழந்தையுடன் காணாமல் போன குடும்பம் : பொலிசார் தேடுதல் வேட்டை..!

பிரித்தானியாவில் புதிதாக பிறந்த குழந்தையுடன் காணாமல் போன தாய் மற்றும் தந்தையை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரித்தானியாவில் வியாழக்கிழமை இரவு போல்டனுக்கு அருகே உள்ள M61 சந்திப்பில் கார் ஒன்று பழுதடைந்த பிறகு, கான்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் மார்க் கார்டன்(Mark Gordon) தம்பதியனர் அவர்களுக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் காணாமல் போயுள்ளனர்.

புதிதாகப் பிறந்த குழந்தையுடன் காணாமல் போன தாய் மற்றும் தந்தையை தேடும் பொலிஸார், அவர்களை கடைசியாக பார்த்த இடத்திலிருந்து சுமார் 200 மைல் தொலைவில் சம்பந்தப்பட்ட பெண்ணை காட்டுவதாக நம்பப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “கான்ஸ்டன்ஸ், மார்க் மற்றும் குழந்தை பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் கவலை” என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கான்ஸ்டன்ஸ் மார்டன்(Constance Marten) மிகச் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்தார், ஆனால் அவளோ அல்லது குழந்தையோ மருத்துவ நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படவில்லை” என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன குடும்பத்தின் வாகனம் பழுதடைந்த பிறகு, அவர்கள் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறி, ஹைஃபீல்ட் மற்றும் லிட்டில் ஹல்டன் பகுதிகளை இணைக்கும் ஆங்கர் லேன் பாலத்தை நோக்கி நடந்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் காணாமல் போனவர்களை விரைவாக கண்டுபிடிக்க விரும்பும் எசெக்ஸ் காவல்துறை மூன்று நபர்களை கண்டறிய உதவுவதற்காக GMP உடன் தொடர்பு கொண்டுள்ளது, மற்றும் அப்பகுதியில் விரிவான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் “ஒரு அம்மாவாக, நான் கான்ஸ்டன்ஸ்க்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என்று GMP இன் பொதுப் பாதுகாப்பு தலைவர், தலைமை கண்காணிப்பாளர் மைக்கேலா கெர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில் “கான்ஸ்டன்ஸ், இது உங்களுக்கு விதிவிலக்கான கடினமான நேரம் என்பதை நான் அறிவேன், மேலும் நீங்கள் பயப்படுவீர்கள், ஆனால் எங்களின் முதன்மையான முன்னுரிமை உங்கள் அழகான பிறந்த குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே என்று நான் உறுதியளிக்கிறேன்.

“உங்களுக்குத் தெரியும், நீங்களும் உங்கள் குழந்தையும் கூடிய விரைவில் மருத்துவ நிபுணர்களால் மதிப்பிடப்படுவது மிகவும் முக்கியம், எனவே அவசர சேவைகள் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்கிருந்தாலும் உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லவும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக பெற்ற குழந்தையை கொன்று வீசிய தாய்..!

Tharshi

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 30 ஆம் திகதிக்கு பின் நீடிக்கும் சாத்தியம் கிடையாது..!

Tharshi

இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை..!

Tharshi

Leave a Comment