குறும்செய்திகள்

இன்று இதுவரை 2759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for2759 people

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரை 2,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 218,893 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,852 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 184,090 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for2759 people

Related posts

இலங்கை தமிழ் அகதிகள் விரும்பும் நாட்டில் தஞ்சம் அடைய அனுமதியுங்கள்..!

Tharshi

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது : இராணுவத் தளபதி..!

Tharshi

27-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment