அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (04) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பை இன்று பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,542.33 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2021 செம்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த நிலையில், இதன்போது 9,339.28 புள்ளிகளாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் பதிவாகியிருந்தது.
அந்தவகையில், இன்றைய மொத்த புரள்வு 3.62 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
1 comment