குறும்செய்திகள்

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்..!

A special meeting of party heads today

நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக, கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மேலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டளை சட்டங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

A special meeting of party heads today

Related posts

ஆன்லைன் கிளாஸ் பரிதாபம் : 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 13 வயது சிறுவன்..!

Tharshi

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி..!

Tharshi

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி..!

Tharshi

Leave a Comment