குறும்செய்திகள்

தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அவசர அறிக்கை..!

Emergency Report issued by the MOD about Terrorist attack on churches

இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

Emergency Report issued by the MOD about Terrorist attack on churches

Related posts

மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சாம்சங்..!

Tharshi

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு..!

Tharshi

ஆபாச பேச்சில் கோடிகளை குவித்த பப்ஜி மதன் கைது..!

Tharshi

Leave a Comment