குறும்செய்திகள்

29-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

29th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 29.2021

பிலவ வருடம், புரட்டாசி 13, புதன்கிழமை,
தேய்பிறை, அஷ்டமி திதி மாலை 6:13 வரை,
அதன்பின் நவமி திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 10:07 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும்.
பரணி: குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும். அலுவலக பணிச்சுமை குறையும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பயணத்துக்குத் திட்டமிடுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு வரும்.
ரோகிணி: வெளியூரில் உள்ள நெருங்கிய உறவினரிடம் இருந்து இனிய செய்தி வரும்.
மிருகசீரிடம் 1,2: புதிய பொருள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனக்கவலைகள் அகலும் நாள். நிதி நிலை திருப்தி தரும்.
திருவாதிரை: உடன்பிறந்தோர் உதவியை அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை.
புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த விஷயம் ஒன்றில் சாதகமான திருப்பம் உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: காலையிலேயே மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
பூசம்: நிம்மதி அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மகிழ்ச்சி தரும் நாள்.
ஆயில்யம்: பலநாள் தட்டிப்போய்க் கொண்டிருந்த நல்ல நிகழ்வு நடக்கும்.

சிம்மம் :

மகம்: எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
பூரம்: வீடு கட்ட, பழுதுநீக்க முற்படுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம் 1: குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: கனவு நனவாகும். சகபணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.
அஸ்தம்: பணியிடத்தில் முன்பு இருந்த சச்சரவு நீங்கி அமைதி நிலவும்.
சித்திரை 1,2: குடும்பத்தினரிடையே முன்பை விட ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும்.
சுவாதி: இளைஞர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.
விசாகம் 1,2,3: உணவுக் கட்டுப்பாடு தேவை. பொழுதுபோக்கு அதிகமாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: தொடர்புகள் விரிவடையும். பணியிடத்தில் திசைத் திருப்பம் ஏற்படும்.
அனுஷம்: உங்களது செயல்கள் உங்களையே பாதிக்காமல் கவனமாயிருங்கள்.
கேட்டை: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை இருக்காது.

தனுசு:

மூலம்: கவனக்குறைவால் பிரச்னை ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
பூராடம்: புதிய நபர்களிடம் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
உத்திராடம் 1: குடும்ப நபர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: முன்பு இருந்த மன உளைச்சல் குறைந்து நிம்மதி வரும்.
திருவோணம்: பணி பற்றிய சிறு பயணத்தால் நன்மை உண்டாகும்.
அவிட்டம் 1,2: வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

கும்பம்:

அவிட்டம் 3,4: பிறரது செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
சதயம்: நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: தேவைக்கேற்ப பண உதவி கிடைக்கும். பேச்சில் கருணை தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். குழந்தைகளின் வாழ்வு செழிக்கும்.
உத்திரட்டாதி: தள்ளிப்போட்ட வேலைகள் இன்று நல்லபடியாக முடியும்.
ரேவதி: தேவையற்ற விவாதங்களில் இருந்து விலகி நிம்மதி காணுங்கள்.

29th September Today Raasi Palankal

Related posts

3000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த மியன்மார் அரசாங்கம்..!

Tharshi

நக்மாவை நடுரோட்டில் கழட்டிவிட்ட பிரபுதேவா..!

Tharshi

வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

Leave a Comment