தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீட்டிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் திகதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14 ஆம் திகதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
2 comments