குறும்செய்திகள்

30-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

30th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 30.2021

பிலவ வருடம், ஐப்பசி 13, சனிக்கிழமை,
தேய்பிறை, நவமி திதி காலை 10:37 வரை,
அதன்பின் தசமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 9:48 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: அலுவலக கவலை தீரும். குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.
பரணி: முக்கியமான பொருட்களுக்காக செலவு செய்வீர்கள்.
கார்த்திகை 1: சுபச்செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: அலுவலக சவால்களை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள்.
ரோகிணி: உணவு விஷயத்தில் அதிக அக்கறை கொள்ளுங்கள்
மிருகசீரிடம் 1,2: குழந்தைகளின் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தாயாரால் நன்மை ஏற்படும். நிம்மதி அதிகரிக்கும்.
திருவாதிரை: நண்பர்களிடம் இருந்து உதவி கிடைப்பதால் நெகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: அலுவலகத்தில் நிதானத்தோடும், பொறுமையோடும் செயல்படுங்கள்

கடகம்:

புனர்பூசம் 4: பொறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் வரும்.
பூசம்: பல நாட்களாக தீர்க்க முடியாத பிரச்னை இன்று நண்பரால் தீரும்.
ஆயில்யம்: எதிர்பாலினத்தை சேர்ந்த நட்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாராத மகிழ்ச்சி உண்டு.
பூரம்: குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு செல்ல ஏற்பாடாகும்.
உத்திரம் 1: கவலைகள் மறக்கும்படியான செய்தி ஒன்று வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சாதுர்யமாக செயல்பட்டு பிரச்னையில் இருந்து தப்புவீர்கள்.
அஸ்தம்: மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
சித்திரை 1,2: பொழுது போக்கு அம்சங்களால் கவலைகளை மறப்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும்.
சுவாதி: உங்களின் தனித்திறமைகள் வெளிப்பட்டு பாராட்டு வரும்.
விசாகம் 1,2,3: பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பணியாளர்கள் பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டும்.
அனுஷம்: பல நாட்களாக காத்திருந்த விஷயம் ஒன்று இன்று நிகழும்.
கேட்டை: எதிரிகள் விலகுவர். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: பொருளாதார நிலையை பற்றி கவலைப்படாதீர்கள்.
பூராடம்: பணியிட வேலைகளை விரைந்து முடித்து நன்மை காண்பீர்கள்.
உத்திராடம் 1: குழந்தைகளால் பெருமை வரும். பணத்தின் அருமையை உணர்வீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உங்களின் செயல்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
திருவோணம்: உடல் சோர்வு ஏற்படலாம். அழகுணர்ச்சி கூடுதலாகும்.
அவிட்டம் 1,2: தீயவழியில் பணவரவுக்கு வாய்ப்பு இருந்தால் அதை ஏற்க வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
சதயம்: பொருளாதார நிலையில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: தடைகளும் தாமதங்களுமாக இருந்த பயணம் ஏற்பாடாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியில் இது நாள் வரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
உத்திரட்டாதி: நியாயமான கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ரேவதி: சுறுசுறுப்பான நாள். பெரியோரின் ஆலோசனை கிடைக்கும்.

30th October Today Raasi Palankal

Related posts

சீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழப்பு..!

Tharshi

இலங்கை குரங்குகளுக்கு அமெரிக்காவிலும் கிராக்கி..!

Tharshi

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு..!

Tharshi

Leave a Comment