குறும்செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி..!

Former MP Duminda Silva holds top government post

அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு உயர் பதவியொன்றை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வாவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி கடித உறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Former MP Duminda Silva holds top government post

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்..!

Tharshi

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்ச்சை நடிகரின் படம்..!

Tharshi

ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்களுக்கும் வரி : பந்துல குணவர்தன..!

Tharshi

Leave a Comment