நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று (22) தெரிவித்தார்.
இதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வழங்கியுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அந்தவகையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
1 comment